சென்னை,பிப்.7- மக்களை நாடி, மக்கள் குறை களை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கு வரும் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் மூலம் செயல்படுத்தி வருகிறார்.
இந்த முகாம் இனிமேல் ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை நடத்தப்பட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட் டுள்ள அரசாணையில், ஜனவரி முதல் டிசம்பர் வரை ஆண்டு முழுவ தும் அனைத்து தாலுகாகளும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில், ஆண்டின் தொடக்கத்தில் ஒரு ஆண்டுக்கான அட்டவணையை மாவட்ட ஆட்சியர்கள் வரைய வேண்டும் என்றும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க போதிய முன்னெச் சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசு தெளிவு படுத்தியுள்ளது
. முகாம் நடைபெறும் நாளில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள், தாங்கள் செல்லும்போது தாலுகாவில் பல்வேறு பகுதிகளையும் பார்வை யிட வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அலுவலர்கள், மனுக்களை உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த முகாம்கள் நடத்துவது குறித்த அறிக்கையை ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதிக்குள் வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.