நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் உதவியாளர்களை நேரடியாக நியமிப்பதை கைவிடவேண்டும், சுமைப்பணி தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த 29 விழுக்காடு கூலி உயர்வை உடனே வழங்க வேண்டும், கணினிபிரிவு ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொதுத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் வியாழனன்று (டிச. 12) கீழ்பாக்கம் நுகர்பொருள் வாணிபக்கழக தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் பி.குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ஆர்.புவனேஷ்வரன், பொருளாளர் எம்.ஏழுமலை, நிர்வாகிகள் கே.சண்முகம், ஆர்.மோகன், கே.சுப்புராஜ், கே.ராஜாங்கம், ஆர்.ஜார்ஜ்பெர்ணான்டஸ், பி.மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.