tamilnadu

img

பழங்குடியினர் நல வாரியத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்திடுக!

சென்னை:
மாநிலம் முழுவதும் பழங்குடியினர் நலவாரியம் செயல்பட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் தாம்பரத்தில் சங்க மாநில துணை தலைவர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர்இரா.சரவணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழக அரசால் பழங்குடி மக்களுக்கென்றுஉருவாக்கப்பட்ட “பழங்குடியினர் நலவாரியம்” செயல்பாடின்றி முடங்கிப் போயுள்ளது. நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டவர்களுக்கு அரசு அறிவித்தநலத்திட்ட உதவிகள் எதுவும் வழங்கப்படுவதில்லை. பெரும்பாலான பழங்குடியினர் வாரியத்தில் உறுப்பினர்களாகவே சேர்க்கப்படாத நிலை இருக்கிறது. எனவே, இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் மாநிலம் முழுவதும் பழங்குடியினர் நலவாரியம்
செயல்பட தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

;