tamilnadu

img

உயர்நீதிமன்ற தீர்ப்பை மீறி முழு கட்டணம் வசூல் நிறுத்தம்

பெற்றோர் போராட்டம் வெற்றி

சென்னை, ஆக. 14 - உயர்நீதிமன்ற தீர்ப்பை  மீறி கல்வி கட்டணம் வசூ லித்த பள்ளியை முற்றுகை யிட்டு பெற்றோர்கள் நடத்திய போராட்டம் வெற்றி  பெற்றுள்ளது. திருவொற்றியூர் ஜோதி நகரில் விவேகானந்தா உயர்நிலைப் பள்ளி உள்ளது.  இங்கு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் எல்கேஜி முதல் 10ம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளி நிர்வாகம், 50 விழுக்காடு தொகையை உடனே செலுத்தும் படி  பெற்றோர்களை கட்டாயப் படுத்தியது. நீதிமன்ற தீர்ப்பின் படி கட்டணம் வசூ லிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தி வந்தனர். இதனை ஏற்க  மறுத்த நிர்வாகம், பெற்றோர் களை பள்ளிக்குள் வர அனு மதிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.ஜெயராமன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பெற்றோர் புத னன்று (ஆக.12) ஆர்பாட் டத்தில் ஈடுபட்டனர். இத னையடுத்து காவல்துறையி னர் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர். சாத்தங்காடு காவல் நிலைய ஆய்வாளர் ரங்க சாமி முன்னிலையில் நிர்வாக  தரப்பில் கிருஷ்ணன், ராம லிங்கம், குபேந்திரன் ஆகி யோரும், பெற்றோர்கள் தரப்பில் ஜெயராமன், வழக்க றிஞர் அஜித், முத்து, மோகன் ஆகியோர் பங்கேற்றனர். இதில், நீதிமன்ற இடைக்கால தீர்ப்பின் அடிப்படையில் கல்விக்கட்டணம் வசூலிக்க நிர்வாகம் ஒப்புக் கொண் டது. இதனால் 6 ஆயிரம் ரூபாய் கட்டணம் குறைத்து செலுத்தும் நிலை உருவாகி உள்ளது.