துணைத்தேர்வு, மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு
சென்னை, ஆக. 29 - தமிழ்நாட்டில் ஜூன், ஜூலை மாதங் களில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் எழுதி, மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பி த்தவர்களுக்கு, மதிப்பெண் மாற்றம் உள்ள தனித்தேர்வர்களின் பதிவெண்கள் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.30) பிற்பகல் வெளியிடப்படுகிறது.
இப்பட்டியலில் இடம்பெறவில்லை எனில், அந்தப் பதிவெண்களைப் பொறுத்தவரை விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என்று அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுகூட்டல், மறு மதிப்பீட்டில் மதிப் பெண் மாற்றம் உள்ள தனித்தேர்வர்கள் மட்டும், மேற்குறிப்பிட்ட இணைய தளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியல் தற்காலிக மதிப்பெண் சான்றி தழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பி.எட் வினாத்தாள் கசிவு
கல்வியியல் பல்கலை. பதிவாளர் நீக்கம்
சென்னை, ஆக. 29 - இரண்டாம் ஆண்டு பி.எட் படிப்புக்கான வினாத் தாள் கசிந்த விவகாரத்தில் ஆசிரியர் கல்வியியல் பல் கலைக்கழக பதிவாளர் ராம கிருஷ்ணன் பதவியில் இருந்து நீக்கம் செய்யப் பட்டார்.
புதிய பதிவாளராக ராஜ சேகரை நியமித்து, உயர் கல்வித்துறை உத்தரவிட்டு ள்ளது.
பல்கலைக்கழகத்தில் இருப்பவர்களே கேள்வித் தாள்களை 2 ஆயிரம் ரூபாய் க்கு விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது.
தேர்வு தொடங்கிய கடந்த திங்கட்கிழமை முதல் கேள்வித்தாள்கள் விற்பனை செய்யப்பட்டு வந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி யுள்ளது. வியாழக்கிழமை (ஆக.29) காலை 10 மணிக்கு மாணவர்களுக்கு வழங்க திட்டமிட்டிருந்த கேள்வித்தா ள்கள் திரும்ப பெறப்பட்டு, புதிய வினாத்தாள்களுடன் தேர்வு நடைபெறுகிறது.