tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இன்று முதல்  கோடை விடுமுறை! 
சென்னை, ஏப். 23 - ஒன்று முதல் 9 வரை யிலான வகுப்புகளுக்கு, ஆண்டு இறுதி தேர்வுகள் நடந்து வருகிறது. இந்த தேர்வுகள் செவ்வாய்க் கிழமையுடன் நிறைவடைந் தன. இதையடுத்து, ஏப்ரல் 24 முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. மீண்டும் ஜூன், 3 அல்லது 5‌-ஆம் தேதி பள்ளியை திறக்க தமி ழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

78 வயது நீச்சல் வீரர்  கோபால் ராவ் பலி
இராமேஸ்வரம்,ஏப்‌.23- தலைமன்னார் - தனுஷ் கோடி இடையே நீந்திச் செல்வதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த கோபால் ராவ் (78) தலைமையில் 13 பேர்,  ஏப்ரல் 23 அன்று அதிகாலை  12.10 மணிக்கு 13 பேரும் கடலில் குதித்து நீந்த தொடங்கினர். இரண்டு மணி நேரம் வரை நீந்திய நிலையில் திடீரென கோபால் ராவுக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. படகில் இருந்த மருத்துவக் குழுவினர் அவரை மீட்டு பரி சோதனை செய்த போது, மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துவிட்டது தெரிய வந்தது. இதனைதொடர்ந்து, கோபால் ராவ் உடலை தனுஷ்கோடி துறைமுகத் திற்கு கொண்டுவந்தனர்.

;