கோடைக்காலம் துவங்கியது
முல்லை பெரியாற்றில் தண்ணீர் திறப்பு குறைப்பு
தேனி, மார்ச் 6- முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணை, தேக்கடி ஏரி ஆகியவற்றில் மழை பெய்யவில்லை. மேலும் தற்போது கோடைக் காலம் தொடங்கி விட்டதால், தமிழகப் பகுதிக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் மார்ச் 5 முதல் நிறுத் தப்பட்டது. மார்ச் 4 வரை விநாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலை யில், தற்போது குடிநீர் மற்றும் கால்நடை களின் தேவைக்காக இரச்சல் பாலம் வழி யாக விநாடிக்கு 105 கன அடி மட்டும தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. புதன் கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட் டம் 122.05 அடியாக (மொத்த உயரம் 152 அடி) உள்ளது.
ஒன்றிய அரசு நிறுவனம் ரூ.10 கோடி வரி பாக்கி!
சென்னை மாநகராட்சி நோட்டீஸ்
சென்னை, மார்ச் 6- சென்னை பாரி முனையிலுள்ள ஒன் றிய அரசின் துறைமுக நிர்வாகம் ரூ. 12.5 கோடி சொத்துவரி பாக்கி வைத்துள்ளது. இதில், நிலுவைத்தொகை ரூ. 10 கோடியே 37 லட் சத்தை, பலமுறை தகவல் தெரிவித்தும் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, குறிப்பிட்ட கால அவ காசத்திற்குள் சொத்து வரிப் பாக்கியை செலுத்தவில்லை எனில், தமிழ்நாடு நகர்ப் புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம் 1995, பிரிவு 116-இன் படி உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத் துள்ளது.
தூய்மைப் பணியாளருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி
சென்னை, மார்ச் 6- திருநெல்வேலி மாவட்டம், ராதா புரம் வட்டம், பணகுடியைச் சேர்ந்த ஒப் பந்த தூய்மைப் பணியாளர் வசந்தி (38), பணியின்போது வாகன விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். விபத்தில் இரண்டு கால்கள் மற்றும் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டு, நடக்கமுடியாத நிலை ஏற்பட் டுள்ளது. தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இந்த நிகழ்வுக்கு வருத்தமும் வேதனையும் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறி வித்துள்ளார்.