இனி இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது!
சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சி தலைவர்கள்
கு. செல்வப்பெருந்தகை (காங்.): கள்ளக்குறிச்சி கோர சம்பவத்தில் மரண ஓலம் அனைவரது மனதையும் உலுக்கி வருகிறது. காவல்துறையில் ஒரு சிலர் செய்யும் தவறு அரசையே குற்றம் சொல்லும் நிலைக்கு ஆளாக்கி வருகிறது. எனவே, இதுபோன்ற சம்பவம் இனியும் நடக்காமல் இருக்க நமது முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து முற்றுப் புள்ளி வைப்பார் என்று நாங்கள் முழு மையாக நம்புகிறோம். மக்களும் நம்பு வார்கள்.
தி. வேல்முருகன் : கள்ளக்குறிச்சி பேரி ழப்பை யாரும் ஏற்றக் கொள்ள வில்லை. இந்த சம்பவத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் வரைக்கும் அனைவரும் பொறுப்பு ஏற்க வேண்டும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது எடுத் திருக்கும் நடவடிக்கை போதுமானது அல்ல. அவரைக் கைது செய்யவேண்டும்.
ஜி.கே. மணி: கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கி எடுத்திருப்பதால் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாராயம் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்.
நயினார் நாகேந்திரன்: கள்ளக் குறிச்சியில் விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இனியும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ம. சிந்தனைச்செல்வன் (விசிக), டி. ராமச்சந்திரன்(சிபிஐ), சதன் திருமலைக் குமார் (மதிமுக), வைத்திலிங்கம் (ஓபிஎஸ் அணி) ஆகியோரும் பேசினர்.
கருப்பு சட்டை அதிமுக!
சென்னை, ஜூன் 21- கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணா புரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து ள்ளனர். மேலும் பலர் தற்போதும் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். இந்த நிலையில், சட்டப்பேரவை யில் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) கள்ளக் குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மான த்துக்கு அதிமுக சார்பில் கடிதம் அளிக்கப் பட்டு இருந்தது. இந்த நிலையில், கள்ளக் குறிச்சி சம்பவத்தில் மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கறுப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்த னர். அதேபோல், பாமக உறுப்பினர் களும் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.