tamilnadu

img

உடல் பருமனுக்கும் நீரிழிவு நோய்க்கும் வலுவான தொடர்பை உறுதிப்படுத்திய ஆய்வு

உடல் பருமனுக்கும் நீரிழிவு நோய்க்கும்  வலுவான தொடர்பை உறுதிப்படுத்திய ஆய்வு 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை சென்னை மக்களிடையே நீரிழிவு குறித்து நடத்தப்பட்ட ஒரு விரிவான ஆய்வின் முக்கிய முடிவுகளை வெளி யிட்டுள்ளது.   இம்மருத்துவமனை 2024 இல் நடமா டும் நீரிழிவு சிகிச்சை வாகனம் என்ற  திட்டத்தை தொடங்கி 100 நாட்க ளுக்கும் மேலாக சென்னை முழுவதும் இலவச நீரிழிவு நோய் பரிசோதனை முகாம்களை நடத்தி ஆய்வு மேற் கொண்டது. இத்திட்டத்தின் கீழ் நகரின் பல்வேறு இடங்களில் 3,971 நபர்க ளுக்கு நீரிழிவிற்கான தொடக்க நிலை பரிசோதனை சோதனை செய்யப் பட்டது.  ஆய்வு முடிவுகள்   2 ஆம் வகை  நீரிழிவு நோயால் இதுவரை பாதிக்கப்படாதவர்களில் 21 விழுக்காட்டினர் தங்கள் ரத்த சர்க்கரை அளவுகளில் உள்ள அசாதாரண நிலையை (டிஸ்கிளைசீமியா) அறிய வில்லை. நீரிழிவு தொடர்பாக ஆரம்ப கால நோயறிதல் மற்றும் அதன் மீதான விழிப்புணர்வில் உள்ள குறிப்பிடத் தக்க இடைவெளியை இது சுட்டிக்காட்டு கிறது. கர்ப்ப கால நீரிழிவு நோய் ( (கர்ப்ப காலத்தில் அதிக ரத்த சர்க்கரை அளவு) இருந்த பெண்களில் 55.1 விழு க்காட்டினருக்கு 2 ஆம் வகை நீரிழிவு நோய்  உருவாகியுள்ளது தெரியவந்து ள்ளது. கர்ப்ப காலத்திற்குப் பிந்தைய நீரிழிவு நோய் பரிசோதனை மற்றும்  தடுப்பு நடவடிக்கைகளின் முக்கியத் துவத்தை இத்தரவு எடுத்துக்காட்டு கிறது. வகை 2 நீரிழிவு நோய் வரலாறு உள்ள நபர்களிடையே (67.6%) உடல்  பருமன் குறிப்பிடத்தக்க அளவு அதிக மாக இருந்தது; தங்கள் ரத்த சர்க்கரை அளவுகளில் உள்ள அசாதாரண நிலையை அறியாத நபர்களிடையே (64.7%) உடல் பருமன் கணிசமாக இருந்தது. இது, உடல் பருமனுக்கும் நீரிழிவு நோய்க்கும் இடையே உள்ள  வலுவான தொடர்பை உறுதிப்படுத்து கிறது. தங்கள் ரத்த சர்க்கரை அளவு களில் உள்ள அசாதாரண நிலையை  அறியாத நபர்களிடையே மாவுச் சத்து அதிகம் உள்ள உணவுகளை (கார்போஹைட்ரேட்) உட்கொள்ளு தல் குறிப்பிடத்தக்க வகையில் அதிக மாக இருந்தது (88.5%).இது கண்டறி யப்படாத ரத்த சர்க்கரை ஒழுங்கின்மை களில் உணவுப் பழக்கம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை இந்த தரவு காட்டுகிறது என்று  காவேரி மருத்துவ மனையின் மூத்த நீரிழிவு நோய் நிபுணர் பரணீதரன் கூறினார்.