tamilnadu

கல்வி நிலையங்களில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க துரித நடவடிக்கை எடுத்திடுக: மாணவர் சங்கம்

சென்னை,செப்.3- தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிலை யங்களில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்திட தமிழக அரசு துரிதமான நட வடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்தி யுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத்  தலைவர் தௌ. சம்சீர் அகமது, மாநி லச் செயலாளர் கோ. அரவிந்தசாமி ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 சமீபத்தில் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை பயிற்சி மருத்துவர்  கொடூரமான முறையில்  கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது நாடு முழு வதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. இதைக்கண்டித்து நாடு முழு வதும் மாணவர்கள், பொதுமக்கள் என  பல்வேறு தரப்பினர் பெரும் போராட்ட த்தை முன்னெடுத்தனர். இதனை தொட ர்ந்து பல்வேறு கல்வி நிலையங்களில் மாணவிகளுக்கு எதிராக நடக்கும் அடக்கு முறைகள் வெளிவர துவங்கின.

இந்த நிகழ்வுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பினும், முறை யாக விசாரணை நடத்தப்பட்டு குற்ற வாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கல்வி நிலை யங்களிலும் உட்புகார் குழுக்கள் அமைத்து, அதை மாணவர்களுக்கு தெரியப்படுத்தி, முறையாக இயங்கு வதை உறுதி செய்ய வேண்டும். மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

பாலியல் வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து நிறுத்திட பாலி யல் சமத்துவ கல்வி மற்றும் உரை யாடல் அனைத்து இடங்களிலும், குறிப்பாக கல்வி வளாகங்களில் நடத்தப்பட வேண்டும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.