சென்னை, ஜூன் 28- வருகிற 30-ந்தேதி முதல் அரசு தேர்வுத்துறையின் இணைய தளத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மாண வர்களின் வருகைப்பதிவேடு விவ ரங்களை பதிவேற்றம் செய்ய முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் இயக்குனர் (முழு கூடுதல் பொறுப்பு) மு.பழனிச் சாமி அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை வருமாறு:- www.dge.tn.gov.in என்ற அரசு தேர்வுத்துறையின் இணைய தளத்தில் இருந்து மாவட்ட கல்வி அலுவலகங்கள் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 வகுப்பு மாணவர்களு டைய முகப்பு தாளை ஜூன் 29-ந்தேதி பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட் டுள்ள மாணவர்களுடைய வரு கைப்பதிவேட்டை சரிபார்த்து பள்ளி நாட்கள் எத்தனை? மாணவர்கள் வருகை தந்த நாட்கள் எத்தனை? என் பதை அதில் குறிப்பிட வேண்டும். அதன்பின்னர், வருகிற 30-ந்தேதி முதல் அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் வருகைப்பதி வேடு விவரங்களை பதிவேற்றம் செய்யவேண்டும். வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீதம் மதிப் பெண்ணும், காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண் அடிப்ப டையில் 80 சதவீதமும் என மொத்தம் 100 சதவீதத்துக்கு மதிப்பெண்கள் கணக்கிடப்படும். இந்த பணிகள் யாவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் என்பதால் எவ்வித புகாருக்கும் இடம் கொடுக்காமல் கவனமாக செயல்படவேண்டும். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.