தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து சென்னையில் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பட்டமளிக்கும் கடமையைச் செய்யாமல் தவிர்த்தல், துணைவேந்தர்கள் நியமனத்தில் ஒன்றிய அரசின் ஆதிக்கத்தைக் கொண்டுவர முனைதல், துணைவேந்தர் நியமனம் தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டிருத்தல் ஆகியவற்றுக்காக ஆளுநரையும், மருத்துவக் கலந்தாய்வு நடத்தும் உரிமையை மாநில அரசிடமிருந்து பறிக்கும் ஒன்றிய அரசையும் கண்டித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு - தமிழ்நாடு சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.