tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க வலியுறுத்தி போராட்டம்

விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முண்டியம்பாக்கம் ஊராட்சி யில் 100 நாள் வேலை கேட்டு மனு கொடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க வலியுறுத்தி மார்ச் 3 ஆம் தேதி விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இது குறித்து தீக்கதிரில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார்.