கடலூர்,ஜூன் 25- அரசு போக்குவரத்துக்கழகத்தில் 20 மணி நேரத்திற்கு மேல் பணி செய்யும் அளவிற்கு கிலோ மீட்டர் நீட்டிப்பை கண்டித்து போக்கு வரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் கடலூர் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. போக்குவரத்து தொழிலாளர்களி டம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ. 8,000 கோடி பணத்தை திரும்ப தர வலியுறுத்தியும், சொசைட்டிக்காக பிடிக்கப்பட்ட பணத்தை திரும்பப் பெற வேண்டியும், பி.எப், இ.எல் சரண்டர், பஞ்சப்படி நிலுவை, சீருடைக்கான தையற்கூலி, கல்வி முன்பணம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.பெரியசாமி தலைமை தாங்கினார். போக்குவரத்து ஊழி யர் சங்க பொதுச் செயலாளர் ஜி.மணிவண் ணன், துணை பொதுச் செயலாளர் பி.கண் ணன், துணைத் தலைவர் பி.எழிலரசன் ஆகி யோர் உரையாற்றினர்.