சென்னை தெற்கு திட்டத்தில் முறைகேடாக பதவி உயர்வு மூலம் மின்பாதை ஆய்வாளர், வணிக ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பியதை கண்டித்து புதனன்று (ஆக.5) கே.கே.நகரில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் கூட்டு முறையீடு போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்தப்போராட்டத்தில் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர், மண்டலச்செயலாளர் ஏ.முருகானந்தம், பொருளாளர் பண்டாரம்பிள்ளை, தெற்கு கிளை-1 தலைவர் தரணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.