மத்திய அரசு கொண்டு வந்துள்ள மக்களை பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் முதல் காந்தி நகர் வரை 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மனித சங்கிலி இயக்கம் நடைபெற்றது. இதில் சௌந்தரராஜன், கள்ளுர் ரவி (திமுக), பி.காத்தவராயன், கே.சாமிநாதன் பேரணாம்பட்டு குணசேகரன் (சிபிஎம்), செல்லபாண்டியன் (விசிக) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.