tamilnadu

img

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மழை நீடிக்கும்

சென்னை,அக்.24- வங்கக்கடல், அரபிக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு வலுப்  பெற்று வருவதால் தமிழ கத்தில் 2 நாட்களுக்கு மழை  பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரி வித்துள்ளார். வடகிழக்கு பருவமழை கடந்த 16 ஆம் தேதி தொடங்  கியது. அன்று முதல் தமிழ கம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து 4 நாட்களாக கனமழை பெய்தது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கும், நிலச் சரிவும் ஏற்பட்டது. வங்கக்கடலில் நிலவிய  காற்றழுத்த தாழ்வு பகுதி யால் வட மாநிலங்களிலும் மழை பெய்தது. இந்த நிலை யில் அரபிக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் உள்ள ஈரப்பதத்தை காற்று ஈர்த்துச் சென்றதால் நேற்று பல பகுதிகளில் வெயில் அடித்தது. ஆனாலும் நேற்றிரவு சென்னை உள்பட பல பகுதி களில் மீண்டும் மழை பெய்ய  ஆரம்பித்தது. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும்  அதனை ஒட்டிய தென்மேற்கு  வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வடக்கு திசையில் ஆந்திரா  நோக்கி நகர்ந்து செல்கி றது. இதேபோல் அரபிக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டல மாக வலுப்பெற்று வருகிறது.  இதன் காரணமாக தமிழ கத்துக்கு மீண்டும் மழை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்  ளது. இதுகுறித்து வானிலை மைய அதிகாரி கூறியதா வது:- காற்றழுத்த தாழ்வு வலு பெற்று வருவதால் கன மழை  நீடிக்கும் என்பதால் மீனவர் கள் ஆந்திரா மற்றும் அரபிக்  கடல் பகுதிகளுக்கு 2 நாட்  களுக்கு செல்ல வேண்டாம்.  சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்து டன் காணப்படும். அவ்வப் போது தூறல் விழும். ஒரு சில நேரங்களில் மிதமான மழை பெய்யும். இவ்வாறு அவர் கூறி னார்.