tamilnadu

img

வங்கக் கடலில் வலுவடைந்த புயல் சின்னம் வட தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை

சென்னை, அக். 15 - தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து செவ்வாயன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ள தால், தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை கொட்டி வருகிறது.

குறிப்பாக, சென்னை உட்பட வட தமிழகத்தில் திங்கட்கிழமை (அக்.14) இரவு முதலே கனமழை கொட்டி வரு கிறது. 

சென்னையில் எழும்பூர், பெரம்பூர்,  கொளத்தூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், புதுப்பேட்டை, அண்ணா சாலை, மயிலாப்பூர், மந்தை வெளி, ஆர்.ஏ.புரம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு முக்கியச் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தேங்கிய நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடு பட்டுள்ளனர்.

தொடர் கனமழையால் பல இடங்களில் நீர் தேங்கியது. தண்ணீர் வெளியேற வழியின்றி குளம்போல் காட்சியளித்தது. பல இடங்களில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் தத்தளித்தனர். நான்கு மற்றும் மூன்று சக்கர வாகனங்களும் பல இடங்களில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டன. 

மெட்ரோ ரயில் பாதை அமைக்கும்  பணிகள் நடைபெற்று வரும் பகு திகள் அனைத்தும் மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டன. சில இடங்களில் மாநகராட்சி நிர்வாகம் மோட்டர்  வைத்து தண்ணீரை வெளியேற்ற எடுத்த முயற்சிகள் கைகொடுக்க வில்லை. இதனால், வாகன ஓட்டிகள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றிச் சுற்றிச் சென்றாலும் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேரும் நிலை ஏற்பட்டது. சில சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன.

வெள்ளத் தடுப்பு: முதல்வர் நேரில் ஆய்வு

சென்னையில் கனமழை கொட்டி வரும் நிலையில், யானை கவுனி, பட்டா ளம் உள்ளிட்ட பகுதிகளில் முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு, வெள்ளத் தடுப்புப் பணி களை முடுக்கிவிட்டார். தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட களப் பணியாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில், அவர்களோடு தேநீர் அருந்தினார். முன்னெச்சரிக்கை பணி கள் குறித்தும் கேட்டறிந்தார்.  அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு, கே. என். நேரு, மேயர் பிரியா ஆகியோர் உடனிருந்தனர். 

பின்னர், ஆய்வு தொடர்பான புகைப் படங்களை சமூக வலைதளத்தில் பதி விட்ட முதல்வர், “கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தன்னலம் கருதாமல் - நேரம் காலம் பார்க்காமல் நம் துயர்  துடைக்க களம் காண்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள், மாநக ராட்சி ஊழியர்கள் மற்றும் அலு வலர்கள்! அவர்களுடன் நானும் எப்போ தும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன்” என்று கூறியுள்ளார்.

புயல் சின்னம்

புயல் சின்னத்தைப் பொறுத்த வரை, வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த  காற்றழுத்த தாழ்வு பகுதி மிக மெது வாக நகர்வதால், பல மணி நேரம் அதே இடத்தில் நீடிக்கிறது. இது மேற்கு  - வடமேற்கு திசையில் நகர்ந்து, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதற்கடுத்த 24 மணி நேரத்தில் வட தமி ழகம் - புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி களை நோக்கி நகரக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதாவது, புயல் சின்னத்தின் பாதை வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து  வருவதும், அது புயலாக உருமாறினால் சென்னை – புதுவை - தெற்கு ஆந்திரம் இடையே கரையை கடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மூன்று வகையான வானிலைகளால் மழை

தென்கிழக்கு வங்கக் கடலில் திங்கள் கிழமை காலை உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மட்டுமன்றி, தமிழக பகுதிகளிலும், தெற்கு ஆந்திர கட லோரப் பகுதிகள் மற்றும் அதை யொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலிலும் வளிமண்டல மேலடுக்கு சுழ ற்சிகள் நிலவுகின்றன. மூன்றாவதாக, அரபிக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஓமன் கடற்கரையை நோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு, இம்மூன்று விதமான வானிலைகள் காரணமாகவும், தமிழகத்திற்கான மழை வாய்ப்பு அதிகரித்துள்ளது.