சென்னை, ஆக. 6- மாற்று இடம் வழங்காமல் சாலை யோர கடைகளை அப்புறப்படுத்தக் கூடாது என்று சாலையோர சிறுகடை விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மாவட்ட சாலையோர சிறுகடை விற்பனையாளர்கள் சங்க த்தின் முதலாம் ஆண்டு பேரவை (தோழர் சு.லெனின் சுந்தர் நினை வரங்கம்) ராயபுரத்தில் செவ்வா யன்று (ஆக. 6) நடைபெற்றது. மாநகராட்சி விற்பனைக் குழு உறுப்பி னர் கே.பலராமன் தலைமை தாங்கி னார். வண்ணாரப்பேட்டை பெரிய மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் டி.வெங்கட் வரவேற்றார்.
சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ஜெயராமன் பேர வையை துவக்கி வைத்து பேசினார். 41ஆவது வார்டு மாமன்ற உறுப்பி னர் பா.விமலா, எம்.சி. ரோடு வணிக வளாக வியாபாரிகள் சங்க தலைவர் கே.செல்வானந்தம், துணைத் தலைவர் எஸ்.பவானி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.லோகநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் பேரவையை நிறைவு செய்து பேசுகையில், 2010ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் சாலையோர கடைகள் குறித்து வழி காட்டுதலை வழங்கியது. 2014ஆம் ஆண்டு மக்களவையில் “சாலை யோர வியாபாரிகள் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டம்” இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின் அடிப்படையில் விற்பனைக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படும் போது, ஒருவர் சிறுபான்மை சமு தாயத்தை சேர்ந்தவராகவும், ஒருவர் மாற்றுத்திறனாளி, பெண் ஒருவர், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் என அந்த குழுவில் அனை வரும் இணைந்து செயல்பட்டால் தான் ஒருதலைபட்சமான முடிவு இருக்காது என கருதப்பட்டது.
கொரானாவிற்கு பிறகு சாலையோர விற்பனைக் கடை கள் அதிகரித்துள்ளன. அப்படியென் றால் தற்போது விற்பனை செய்யும் சாலைகளை அதிகரிக்க வேண்டும். ஆனால் ஏற்கெனவே அனுமதிக்கப் பட்ட 1,100 தெருக்களையும் குறைத்து 724 தெருக்களில் மட்டுமே வியாபாரம் செய்ய அனுமதி என மாநகராட்சி நிர்வாகம் கூறுகிறது. சாலையோர வியாபாரிகளால் ஏதா வது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படு கிறதா என கேள்வி எழுப்பினார். சாலையோர கடைகளை அப்புறப் படுத்தினால் வியாபாரிகளின் வாழ் வாதாரம் பாதிக்கப்படுவதோடு, ஏழை எளிய கூலித் தொழிலாளர் களும் கடுமையாக பாதிக்கப்படு வார்கள்.
மிகப்பெரிய களப் போராட்டத் தையும், சட்டப் போராட்டத்தையும் நடத்தி பெறப்பட்டதுதான் அந்த 791 கடைகளும், அடையாள அடையும். நமது உரிமையை பறிக்க மாநக ராட்சி நிர்வாகம் முயற்சி செய்தால், அதை ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலமே முறியடிக்க முடியும். உங்க ளின் போராட்டங்களுக்கு சிஐடியு எப்போதும் துணை நிற்கும் என்று மகேந்திரன் பேசினார்.
இதில் டி.முகமது காசிம் (எம்.கே.பி. நகர் மேற்கு நிழற்சாலை வியாபாரிகள் சங்கம்), எஸ்.அறி வழகன், எம்.எஸ்.மீரா மொய்தீன் (எம்.கே.பி. நகர் மத்திய நிழற்சாலை வியாபாரிகள் சங்கம்) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்
சாலையோர வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன் வழங்க வேண்டும், அத்தியாவசிய தேவைக்காக சாலையோர கடை களை அப்புறப்படுத்தும் போது, மாற்று இடம் வழங்கி விட்டு அப்புறப்படுத்த வேண்டும், அனை வருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
நிர்வாகிகள்
செயல் தலைவராக கே.பலரா மன், தலைவராக ஆர்.ஜெயராமன், செயலாளராக டி.வெங்கட், பொரு ளாளராக எஸ்.கோபாலகிருஷ்ணன், துணைத் தலைவர்களாக அரி, எம்.தமீம் சேட்டு, பா.பாக்கியலட்சுமி, துணைச் செயலாளர்களாக விற்பனைக் குழு உறுப்பினர் மோனிஷா, பொ.பூபதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.