சென்னை:
அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் முன்பு ஜுன் 13 வியாழனன்று இந்திய மாணவர் சங்கம் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டது.
சென்னையில் மாநில பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகத்தை மாநிலச் செயலாளர் வி. மாரியப்பன் தலைமையில் 140 மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 97 பேர் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். போராட்டத்தில் வடசென்னை மாவட்டச் செயலாளர் இசக்கி நாகராஜ், தென் சென்னை மாவட்டச் செயலாளர் சந்துரு, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தமிழ் பாரதி, திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தினேஷ், மாவட்டத் தலைவர்கள் காஞ்சிபுரம் செந்தமிழன், திருவள்ளூர் செல்வம், வடசென்னை ராஜேந்திர பிரசாத், மாநில செயற்குழு உறுப்பினர் திவ்யபாரதி, மாநிலக் குழு உறுப்பினர் சுபாஷ், மத்தியகுழு உறுப்பினர் உமன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையில் மாநில தலைவர் ஏ டி கண்ணன் தலைமையில் 25க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் வேல் தேவா, மாவட்டத் தலைவர் பாலா, மாவட்டத் துணை நிர்வாகிகளான பிரியா மனோஜ் உட்பட மூன்று மாணவிகள் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
கன்னியாகுமரியில் மாவட்டத் தலைவர் பதில் சிங் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் காவியா, மாவட்ட நிர்வாகிகள் சச்சின் ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.தூத்துக்குடியில் மாவட்டச் செயலாளர் சுரேஷ் தலைமையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் ஜாய்சன், மாநகரச் செயலாளர் சுடல ராஜு, தலைவர் கார்த்திக் மாரிச்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முதன்மைக் கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
விருதுநகரில் மாவட்டத் தலை வர் குமாரசாமி தலைமையில் கோரிக்கை மனு குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மாடசாமி தலைமையில் கோரிக்கை மனு அளித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சிவகங்கையில் மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் கியூபா, சோபியா, பாரதி, கிருஷ்ணமூர்த்தி, சுமித்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். புதுக்கோட்டையில் மாவட்டச் செயலாளர் ஜனார்த்தனம் தலைமையில் மனு அளித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர் ஓவியா, மாவட்டத் தலைவர் பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.திருவாரூரில் மாவட்டச் செய லாளர் சுர்ஜித் தலைமையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் ஆனந்த்உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் தங்க வைக்கப் பட்டனர்.முன்னதாக காலை முதலே பள்ளிக்கூடம் முன்பு காவல்துறை யினர் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாதவாறு தடுத்து நிறுத்திஅராஜகத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு மாவட்டச் செயலாளர் அஹமது தலைமையில் 60க்கும் மேற்பட்ட மாணவ - மாணவி யர் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு மாவட்டத் துணைத்தலைவர் கோபால் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் தங்கமணி, கோபிநாத், பாலச் சந்திரன் உள்ளிட்டோர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை யில் தியாகி நாராயணசாமி நக ராட்சி மேல்நிலைப் பள்ளியில் மயிலாடுதுறை வட்டத் தலைவர் குமரேசன் தலைமையில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் மாரியப்பன், மாவட்டக் குழு உறுப்பினர் கலையரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சீர்காழி வட்டம் வைத்தீஸ்வரன் கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் சீர்காழி வட்டத் தலைவர் மகா புருஷோத்த மன் தலைமையில் ஒருங்கிணைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் விக்னேஸ்வரன் சிவசங்கரி வட்டக் குழு உறுப்பினர் தனுஷ்கோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சீர்காழி நகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டத் தலைவர் லெனின் தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடை பெற்றது. பேரணியில் 800 மாணவர்கள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் வட்டக் குழு உறுப்பினர்கள் ஹெராயின் அபினேஷ் வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உளுந்தூர்பேட்டையில் விழுப் புரம் தெற்கு மாவட்டத் தலைவர் பிரபுதலைமையில் மாவட்டக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஸ்ரீபத், துணை நிர்வாகிகளான சின்ராசு, டார்வின், காரல்மார்க்ஸ் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூரில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தை முற்றுகை யிட்டு மாவட்டச் செயலாளர் அரவிந்த்தலைமையில் 50க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 30 மாணவர்கள் கைது செய்யப்பட்டு மண்ட பத்தில் தங்க வைக்கப்பட்டனர். போராட்டத்தில் மாவட்டத் துணை நிர்வாகிகளான வீரையன் பிரபாகரன், அருண் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காவல்துறையுடன் ஏற்பட்ட தள்ளு-முள்ளில் மாணவர்களுக்கு சிராய்ப்பு காயம் ஏற்பட்டது.திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு மாநில துணைத் தலைவர் எம். கண்ணன் தலைமையில் மனு அளித்து போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் சேதுபதி, மாவட்டதுணை நிர்வாகிகள் அருணாச்சலம், துளசி ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கோயம்புத்தூரில் மாநில துணைத் தலைவர் நிரூபன் தலைமையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர்
தினேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் காவியா, மாவட்ட நிர்வாகிகள் அசார் இம்ரான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் காவல் துணைஆய்வாளருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 2 மாணவிகள் உட்பட 6 பேருக்கு சிராய்ப்பு காயம், சட்டை கிழிப்பு உள்ளிட்டவை நடைபெற்றது. நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ள மாணவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.