சென்னை, ஜூலை 6- மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் நாடு மாநிலத் தலைவராக இருந்தவழக்குரைஞர் ஆம்ஸ்ட் ராங் மிகக் கொடூரமான முறையில் சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப் பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இப்படு கொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை கொலைக் குற்றவாளிகள் அனைவரை யும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்கிட வேண்டுமெனவும் இதுபோன்ற படு கொலை சம்பவங்களை தடுப்பதற்கும், தொழில்முறை கூலிப் படையினர்களின் அட்டகாசத்தை அடக்கி ஒடுக்கிடும் வகையில் காவல்துறை, உளவுத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களின் கொட்டத்தை அடக்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
அதுபோல் சென்னை மாநகரம் உள்பட தமிழகம் முழுவதும் சட்டம் - ஒழுங்கை சீர் கெடுக்கும் முறையில் செயல்படும் தொழில் முறை ரௌடிகளையும், அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் யாராக இருந்தா லும் அவர்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கை கள் மேற் கொள்ள வேண்டுமெனவும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.