tamilnadu

ஜூன் இரண்டாம் வாரத்தில் நீட்தேர்வு பயிற்சி துவக்கம்

சென்னை:
மருத்துவப் படிப்புக் கான நுழைவுத் தேர்வான நீட் தோ்வுக்கான பயிற்சிகள் ஜூன் இரண்டாம் வாரத்திலிருந்து தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டை யன் தெரிவித்துள்ளார்.கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக  மே மாதம் 3 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நீட்தேர்வு ஒத்திவைக்கப்பட் டது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப் பாளையத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம்  கூறுகையில், நீட் தேர்வுக்கான பயிற்சிகள் ஜூன் மாதம் இரண்டாம்வாரத்திலிருந்து தொடங்க வுள்ளது.  மொத்தம் 7,300 மாணவர்களுக்கு 9 கல்லூரி களில் 35 நாட்களுக்கு நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும். பள்ளிகள் திறப்பு எப்பொழுது என்பது, சூழ்நிலைக்கேற்ப விரை வில் அறிவிக்கப்படும் என்றுதெரிவித்தார்.

;