அம்பத்தூர் அருகே உள்ள அயப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ஐய்யப்பா நகர் தாமரை தெருவில் பல நாட்களாக குப்பைக் கழிவுகள் அப்புறப்படுத்தாமல் தேங்கிக் கிடப்பதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் குப்பைக் கழிவுகளை தினசரி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.