tamilnadu

img

எல்ஐசி தனியார்மயமாக்கப்படுவதை கண்டித்து ஊழியர்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம்

எல்ஐசி தனியார்மயமாக்கப்படுவதை கண்டித்து காப்பீட்டுக்கழகம் சென்னை கோட்டம் 2 உள்ளிட்ட அனைத்துப் பிரிவு ஊழியர்சங்கங்கள் மற்றும் முகவர் சங்கம்   சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் செவ்வாயன்று (பிப்.4)  ஒருமணிநேர வெளிநடப்பு வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டத்தலைவர் கு.மனோகரன் தலைமையில் தென்மண்டலத்துணை தலைவர் கே.சுவாமிநாதன் கண்டனஉரையாற்றினார். அதிகாரிகள் சங்க நிர்வாகி கோபக்குமார், வளர்ச்சி அதிகாரி சங்க நிர்வாகி ராமன், முகவர் சங்கம் டிவிசன்2ன் பொதுச் செயலாளர்  வெங்கடேசன் உள்ளிட்டோர் பேசினர். 

***************

எல்ஐசி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் தென்மண்டல தலைமை அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.