அண்ணாநகர் கேந்திரிய வித்யாலயா பள்ளி அருகில் பல நாட்களாக குப்பைக் கழிவுகள் அப்புறப்படுத்தாமல் தேங்கிக் கிடப்பதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் குப்பைக் கழிவுகளை தினசரி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.