சென்னை, ஜூலை 2 - இந்திய எண்ணெய்க் கழகத்தின் தலைவராக ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா வியாழனன்று (ஜூலை 2) பொறுப்பேற்றுக் கொண்டார். ஒரே சமயத்தில், இந்திய எண்ணெய்க் கழகத்தின் சுத்திக ரிப்புத் துணை நிறுவனமான சென்னை பெட்ரோலியக் கழகம், கூட்டுமுயற்சி முனையச் சேவை கள் வழங்கும் இந்தியன் எண் ணெய் டேங்கிங் நிறுவனத்தின் தலைவராகவும் அவர் இருப்பார். இதுதவிர, உலக அளவி லான மூன்று உரத்தொழிற்சாலை களை கூட்டு முயற்சியில் அமைத்துள்ள ஹிந்துஸ் தான் உர்வரக் மற்றும் ரசாயன நிறுவனத்தின் இயக்கு நர்கள் குழுவிலும் அவர் உள்ளார். ரத்னகிரி சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிகல்ஸ் நிறுவனக் குழுவில் உள்ள வைத்யா, அதன் தலைவராகவும் பொறுப்பேற்கவுள் ளார். மேலும், பெட்ரோநெட் எல்என்ஜி நிறுவனக் குழு விலும் இயக்குநராக அவர் இருப்பார். இந்தப் பொறுப்புக்கு வரும் முன்பு, வைத்யா, 2019 அக்டோபர் மாதம் முதல், இந்தியன் ஆயில் குழுவில் இயக்குநராக(சுத்திகரிப்பு) இருந்தார். இதுவரை பொறுப்பில் இருந்து வந்த சஞ்சய் சிங் புதனன்றுடன் (ஜூலை 1) பணியிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அவர் இப்பொறுப்புக்கு வந்துள்ளார்.