இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு
சென்னை, செப். 26 - இராமேஸ்வரம் மீன் பிடித் துறைமுகத்தில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு களில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்கள் கச்சத் தீவு அருகே ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். மேலும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மீன வர்களை விரட்டி யடித்துள்ளனர்.
இலங்கை கடற்படை யின் அச்சுறுத்தலால் படகு ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாகவும், எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை அதிகப்படியான ரோந்துக் கப்பலில் இலங்கை கடற்படையினர் வந்ததாக இதுவரை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.