tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

புதுக்கோட்டை  மீனவர்கள்  9 பேரைக் கைது செய்தது இலங்கை

சென்னை, செப். 4 - எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது வழக்கமான ஒன்றாகிவிட் டது. அந்த வகையில், புதன் கிழமையன்று புதுக் கோட்டை மாவட்ட  மீனவர்கள் ஒன்பது பேரை இலங்கை கப்பற்படையினர் கைது செய்தனர். இவர்கள் நெடுந்தீவு கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டு இருந்ததாகக் கூறி கைது செய்துள்ள இலங்கை கடற் படை, மயிலட்டி துறைமுகத் தில் இலங்கை அதிகாரி களிடம் ஒப்படைத்துள்ளது.

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

சென்னை, செப். 4 - வடக்கு ஆந்திரம் மற்றும் அதனை ஒட்டிய கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நில வும் நிலையில், மத்திய மேற்கு மற்றும் அதனையொ ட்டிய வடமேற்கு வங்கக்கட லில் வியாழனன்று (செப்.5) குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்று இந்திய வானி லை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் செப்டம் பர் 10 வரை ஒரு சில இடங்க ளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செப்.8 வரை மன்னார் வளைகுடா தென்தமிழக கட லோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ  வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2-ஆவது நாளில் தேசிய பங்குச் சந்தையிலும் சரிவு

மும்பை, செப். 4 - இந்திய பங்குச் சந்தை கள் கடந்த 12 நாட்களாக உயர்வைக் கண்டு வந்த நிலையில், செவ்வாயன்று மும்பை பங்குச் சந்தைக் குறியீடு சரிவைச் சந்தித்தது. எனினும் தேசியப் பங்குச் சந்தை சற்று உயர்விலேயே இருந்து வந்தது.

இந்நிலையில், புதன் கிழமையன்று மும்பை பங்குச் சந்தை குறியீட் டெண்ணான சென் செக்ஸ் 202.80 புள்ளிகள் குறைந்து 2-ஆவது நாளாக சரிவைச் சந்தித்தது. இதே போல தேசியப் பங்குச் சந்தையும் 14 நாட்களுக்குப் பிறகு முதன்முறையாக 81.15 புள்ளிகள் சரிவைக் கண்டுள்ளது.