tamilnadu

img

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அணில் குரங்குகள் கடத்தல் – 4 பேர் கைது  

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 அணில் குரங்குகளை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.  

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 8 ஆம் தேதி அங்கிருந்த 2அணில் குரங்குகள் காணாமல் போனதாகவும் வலைகள் உடைக்கப்பட்டதாக பூங்கா அதிகாரி ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதில் பூங்காவின் தற்காலிக ஊழியரான சக்திவேல் மற்றும் அவரது நண்பரான ஜானகிராமனுடன் சேர்ந்து கூண்டு கம்பிகளை அறுத்து அணில் குரங்கை திருடியது தெரியவந்தது.  

மேலும் சூர்யா மற்றும் வினோத் ஆகியோர் கூட்டாளிகளாக இணைந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு 2 அணில் குரங்குகளை ரூ.4 லட்சம் விற்றதும் தெரியவந்தது. அதனைதொடர்ந்து போலீசார் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.