tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

எழும்பூர் - விசாகப்பட்டினம் இடையே  சிறப்பு ரயில்

சென்னை, ஏப். 25- கோடைகால விடுமுறையை ஒட்டி,  கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், எழும்பூர் - விசாகப்பட்டினம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித் துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஏப்ரல் 28, மே 5, 12, 19, 26, ஜூன் 2, 9, 16, 23, 30 ஆகிய  தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து  (ஞாயிற்றுக்கிழமைகளில்) காலை 10.30 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில்  (08558) புறப்பட்டு, அதேநாள் இரவு 10.35 மணிக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டி னம் சென்றடையும்.

ஏப்ரல் 27, மே 4, 11, 18, 25, ஜூன் 1, 8, 15,  22, 29 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை களில்) ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத் தில் இருந்து இரவு 7 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (08557) புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

மேலும், விசாகப்பட்டினம் - எஸ்எம்விடி பெங்களூரு இடையே வாராந்திர  ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு  ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்தபடியே மின்சார ரயிலில் டிக்கெட் எடுக்கலாம்
சென்னை,ஏப்.25- சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் மின்சார ரயில்கள் மற்றும் பறக்கும்  ரயில்களில் பயணம் செய்ய காலை, மாலை நேரங்களில் டிக்கெட் எடுப்பதற்கு வரிசையில் காத்து நிற்க வேண்டிய நிலை  உள்ளது. இந்த சிரமத்தை தவிர்ப்பதற்காக செயலி மூலம் ஆன்லைனில் வீட்டில் இருந்த படியே டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

வீடுகளில் இருந்தவாரே யூ.டி.எஸ். செயலியில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். புறநகர் மின்சார  ரயில்கள் மற்றும் பிளாட்பாரம் டிக்கெட்டுகளை சிரமமின்றி இனி முன்பதிவு  செய்ய முடியும்.

டிக்கெட் முன்பதிவு செய்து 2 மணி  நேரத்தில் ரயில் நிலையத்தை சென்றடைந் தால் பயணத்தை தொடரலாம். டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதை தடுக்க ரயில் நிலையத்திற்கு வெளியே அல்லது ரயில் நிலையங்களுக்கு அருகாமையில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது என்று முந்தைய விதிமுறை இருந்தது.

இந்த புதிய செயலியை ஊக்குவிக்க வும், கவுண்டர்களில் கூட்ட நெரிசலை குறைக்கவும் யூடிஎஸ் செயலி உதவுகிறது.