tamilnadu

சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்த சிறப்பு அமர்வு கலைப்பு

சென்னை, ஜூன் 4-சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த சிறப்பு அமர்வை கலைத்து, சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழக கோவில் சிலைகள், கோவில் நகைகள் திருட்டு தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதி மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு 2018ஆம் ஆண்டு ஜூலையில் அமைக்கப்பட்டது. தற்போது வழக்குகள் எண்ணிக்கை குறைந்து வருவதால் சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வை நியமித்ததற்கான  அறிவிப்பாணையை உயர்நீதிமன்ற பதிவுத்துறை மாற்றியமைத்துள்ளது.இனிமேல் சிலைக்கடத்தல் தொடர்பான பொது நல வழக்குகளை, பொது நல வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் விசாரிப்பர் என அறிவிக்கப் பட்டுள்ளது. சிலைக் கடத்தல் வழக்கில் கைதாகும் நபர்களின் ஜாமீன் மனுக்களை, பிற வழக்குகளின் ஜாமீன் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளே விசாரிப் பார்கள் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

;