tamilnadu

img

ரம்ஜான் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல இடங்களில்  சிறப்பு தொழுகை

சென்னை:
தமிழகத்தின் பல இடங்களில் புதனன்று காலை ரம்ஜான் பண்டிகையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி பெரிய பள்ளிவாசல் சார்பில் மலையம்பாக்கம்  திடலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொடர்ந்து கட்டித் தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

நாமக்கல் இராமலிங்கம் திடலில்  நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  நாமக்கல் பேட்டை பள்ளிவாசல் சார்பில்
இஸ்லாமியர்கள்  பேரணியாக  சென்று தொழுகை நடத்தினர்.இராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட இடங்களிலும் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடைபெற்றன.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் நடைபெற்ற தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். பின்னர் ஒருவருக்வொருவர் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.தேனி மாவட்டம் போடி பெரியபள்ளிவாசலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டஇஸ்லாமியர்கள்  கூட்டு தொழுகை நடத்தி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.