சென்னை, ஏப்.3 - பாதுகாக்கப்பட்ட அரசு நிலங்களில் (பெல்ட் ஏரியா) வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்க பாண்டியனுக்கு வாக்கு கேட்டு செவ்வா யன்று (ஏப்.3) தி.நகர், வேளச்சேரி பகுதி களில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதன் சுருக்கம் வருமாறு:
திமுக பொறுப்பேற்ற பிறகு விரு கம்பாக்கம் தொகுதியில் 57 தெருக்களுக்கு கழிவுநீர் வடிகால் வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ரூ.85 கோடி மதிப்பீட்டில் 50எம்எல்டி புதிய சுத்திகரிப்பு நிலை யம் அமைக்கும் பணிகள் நடைபெறு கிறது. ரூ.6 கோடி மதிப்பீட்டில் கட்டப் பட்டு வரும் சமூக நலக்கூடம் விரை வில் திறக்கப்படும். வாரிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு 1500 பயனாளி களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ரூ.65 கோடி மதிப்பீட்டில், புதிய மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
தி.நகர் பகுதியில் ரூ.50 கோடி மதிப் பீட்டில் தார் சாலைகள் அமைக்கப்பட் டுள்ளது. ஆகாய நடை மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. நொச்சிக்குப்பம் பகுதியில் ரூ.9 கோடி செலவில் 336 மீன் கடைகள் கட்டப்பட்டு வருகிறது. கிண்டியில் ரூ.454 கோடி செலவில் 1000 படுக்கை வசதியுடன் கூடிய கலை ஞர் பன்னோக்கு சிறப்பு மருத்துவ மனை கட்டப்பட்டுள்ளது. சைதாப் பேட்டை - தேனாம்பேட்டை இடையே ரூ.621 கோடி செலவில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. கிண்டியில் முதியோருக்கென்று மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
சோழிங்கநல்லூர் பகுதியில் பாதாள சாக்கடை, குடிநீர் பணிக்காக 2 ஆயிரத்து ரூ.283 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெறுகிறது. உயர் மின்னழுத்த கம்பிகளை ரூ.731 கோடி செலவில் புதைவடமாக மாற்றப்பட்டு வருகிறது. ரூ.330 கோடி செலவில் வடி கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. சோழிங்கநல்லூர் பகுதியில் ரூ.88 கோடி செலவில் டைடல் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வாக்குறுதிகள்
விருகம்பாக்கத்திற்கு புதிய சார்பதிவாளர் அமைத்து தரப்படும். வாரிய குடியிருப்புகள் அனைத்திற்கும் கிரயப் பத்திரம் வழங்கப்படும். அன்னை சத்யா நகர், ராஜிவ் காந்தி நகர், பெரியார் நகர் பகுதிகளில் வீட்டு வசதி வாரிய சீலிங் நீக்கப்பட்டு பட்டா வழங்கப்படும். ராணி அண்ணா நகர், சிவலிங்க புரத்தில் பழைய வாரிய குடி யிருப்புகள் புதுப்பித்துக் கட்டப்படும்.
நாகேஸ்வரா பூங்கா சமூக நலக்கூடம் ரூ.3 கோடி செலவில் புதுப்பித்து கட்டப்படும். ரூ. 3 கோடி செலவில் புதிய கலை பண்பாட்டு அரங்கம் அமைக்கப்படும். தி.நகரில் கட்டப்பட்டு வரும் ரூ.130 கோடி மதிப்பி லான மேம்பாலப் பணிகள் விரைந்து முடிக்கப்படும். சைதாப்பேட்டையில் அரசு புறநகர் மருத்துவமனை ரூ.27 கோடி மதிப்பீட் டில் மேம்படுத்தப்படும்.
ரூ. 1500 கோடி மதிப்பீட்டில் அடையாறு சீரமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும். பெரும்பாக்கத்தில் 51 கோடி மதிப்பீட் டில் அரசு பொதுமருத்துவமனை விரைந்து கட்டப்படும். ரூ.28 கோடி செலவில் வேளச்சேரி ஏரியில் படகு குழாம் அமைக்கப்படும். சென்னை பல்வேறு பகுதிகளில் பட்டா பிரச்சனை உள்ளது.
பெல்ட் ஏரியாவில் பட்டா பெறுவது சிரமமாக உள்ளது. இத்தகைய பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் பட்டா வழங்கப்படும். இந்த பணிகள் தொடர தமிழச்சி தங்கபாண்டியனை வெற்றி பெறச் செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பிரச்சாரத்தில் திமுக சென்னை தெற்கு மாவட்டச் செய லாளர் மா.சுப்பிரமணியன், சென்னை தென்மேற்கு மாவட்டச் செயலாளர் மயிலை வேலு, சட்டமன்ற உறுப்பி னர்கள் ஜெ.கருணாநிதி, ஏ.எம்.வி. பிரபாகரராஜா, அரவிந்த ரமேஷ், அசன் மவுலானா, துணை மேயர் மு.மகேஷ் குமார், சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முரு கன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்றனர்.