tamilnadu

img

ஆபாச அவதூறு பதிவிடும் சமூக விரோதிகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னை:
தமிழக மக்களின் நன் மதிப்பை பெற்றவரும், அரசியல் இயக்கங்களின் மூத்த தலைவரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினருமான, விடுதலைப் போராட்ட வீரர்  இரா. நல்லகண்ணுவை  இழிவுபடுத்தும் வகையில், சமூக அமைதி சீர்குலைத்து மோதலை உருவாக்கும் தீய உள்நோக் கத்துடன் முகநூலில் சித்தரிக் கப்பட்ட ஆபாசப்படம் போட்டு அசிங்கப் படுத்தப்பட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மிக வன்மையாகக் கண்டித்துள்ளது.
மக்கள் ஆட்சி ஜனநாயக நெறிமுறையில் இயங்கி வரும் நமது அரசியல் அமைப்பு கட்டமைப் பில் மாற்றுக் கருத்துக்கள் அனுமதிக்கப் படுகின்றன. சமூக, பொருளாதார, அரசியல் கருத்துக் களில் அறிவார்ந்த விவாதங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

ஆனால் அண்மைக் காலமாக சிலஅமைப்புகள் தங்களை அனைத் துக்கும் ‘மேலானவர்களாக’ முன்னிறுத்துக் கொண்டு மற்றவர்கள் மீது எல்லா வடிவங்களிலும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகவே தோழர் இரா.நல்லகண்ணு உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மீது சமூக ஊடகங்களில் நடத்தப்படும் ஆபாச, அவதூறு பரப்புரை தீவிரமாகி வருகின்றது . தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மீது அவதூறு பரப்புவதன் மூலம் வெறுப்பு அரசியல் வளர்க்கப்படுகிறது. இது அரசியல் அமைப்பு சட்டத்தையும், அதன் உயிராதாரமாக இருக்கும் ‘ஜனநாயக ‘ நடைமுறைகளையும் அழித்தொழிக்கும் பேரபாயம் கொண்ட தீய செயலாகும். இதனை தமிழ்நாட்டு மக்கள் முளைவிடும் போதே கிள்ளி எறிந்திட முன்வர வேண்டும்.
வன்முறையை தூண்டும் நோக்கத்துடன் சமூக ஊடகங்களில் மலிந்து வரும் பரப்புரைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தமிழ்நாடு காவல்துறை உரிய காலத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளாத காரணத்தால் ‘வன்முறை, வெறுப்பு அரசியலில்’ ஆதாயம் தேடும் சட்டவிரோதக் கும்பல்கள் வலிமைபெற்று வருகின்றன.

மனித வாழ்வை அச்சுறுத்தி பரவி வரும்கொரோனா நோய் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் எதிர்கட்சிகளை நிராகரித்தும், உதாசீனம் செய்தும் முதலமைச்சர் பேசி வருவதும் அரசியல் களத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணமாகும்.சமூக ஊடகங்களில் நடத் தப்படும் கோழைத்தனமான தாக்குலை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட  அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்துள் ளன. குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.மக்கள் எழுச்சி கொண்டு ஜனநாயக நெறிமுறைகளை, அரசியல் அமைப்பு சட்டம் உள்ளிட்ட அரசியல் அமைப்புகளை பாதுகாக்க வேண்டிய கடமையை காலம் முன்நிறுத்தியுள்ளது. இதனை ஏற்று ஜூலை 22ஆம் தேதி (புதன் கிழமை)  மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில்  தி.மு.கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் பங்கேற்க உள்ளன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

;