tamilnadu

அவதூறு செய்வோர் இணைய செயல்பாட்டை தடுக்க வேண்டும்: பத்திரிகையாளர் அமைப்புகள் கோரிக்கை

சென்னை, ஜூலை 9- மக்களிடையே பிளவை ஏற்படுத்தும், ஊடகவியலா ளர்கள் மீது அவதூறு பரப்பும் தீய சக்திகளின் இணைய செயல்பாடு, சமூக வலைதள செயல்பாடு ஆகியவற்றைத் தடை செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.சிகாமணி (கருத்துச் சுதந்திர பாதுகாப்புக் குழு), ஆர். ரங்கராஜ் (சென்னை நிருபர்கள் சங்கம்), எம்.மணிகண்டன் (மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்) ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர். மக்களைப் பிரிப்பதையே நோக்கமாக கொண்ட சிலர்,  தமிழ்நாட்டு ஊடகங்களின் செயல்பாட்டைக் கொச்சைப் படுத்தியும் சிறுமைப்படுத்தியும் வெறுப்புப் பரப்புரை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டு மக்கள் சமூக நீதிப் பண்பாடு கொண்டவர்கள். மெய்யறிவும் நுண்ணறிவும் பகுத்தறிவும்  மிக்கவர்கள். மக்களைப் பாகுபடுத்தி அரசியல் செய்ய நினைக்கும் தீய சக்திகளை அவர்கள் நிச்சயம் முறியடிப் பார்கள் என்றும் அந்த அறிக்கையில் அவர்கள் தெரி வித்துள்ளனர்.

;