tamilnadu

பத்திரிகையாளர்கள் பற்றி  அவதூறு: 3 பேர் மீது காவல்நிலையத்தில் புகார்

சென்னை, ஆக.3 - பெண் பத்திரிகையாளர்கள் குறித்தும், சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறு செய்து வரும் இந்துத்துவா பிரமுகர்கள் கல்யாண  ராமன், மாரிதாஸ், கிஷோர் கே சாமி ஆகியோர் மீது சென்னை திருவான்மியூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம் சார்பில் ஊடகவிய லாளர் சோனியா அளித்துள்ள அந்த புகாரில், வன்முறையை தூண்டுதல்,  பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் போன்ற வகையில் செயல்பட்டு  வரும் மூவர் மீதும் 505(1)(பி), 505(2), பெண்கள் வன்கொடுமை சட்டம்  ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிய வலியுறுத்தப்பட்டுள்ளது.

;