tamilnadu

img

பொதுத்தேர்வில் ஸ்கெட்ச் பயன்படுத்தக்கூடாது.... தேர்வுத்துறை அறிவுறுத்தல்

சென்னை:
10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வின் போது ஸ்கெட்ச் மற்றும் வண்ண பென்சில்களை பயன்படுத்தக்கூடாது என்று தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13 ஆம்தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கு ஒருசில நாட்களே உள்ளநிலையில் தேர்வுத்துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

அதில், செல்போன் அல்லது இதர தொலைத்தொடர்பு சாதனங்களை தேர்வு நடைபெறும் வளாகம் மற்றும் தேர்வு அறையினுள் எடுத்து செல்லக் கூடாது. விடைத்தாளில் எக்காரணம் கொண்டும் ஸ்கெட்ச் பேனாக்கள் மற்றும் கலர் பென்சில்களை பயன்படுத்தக் கூடாது. குறிப்பிட்ட மாணவரின் விடைத்தாள் என தனித்து காட்டும் விதமாக இருக்க கூடாது என்பதற்காக இந்தநடைமுறை கொண்டுவரப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

;