சென்னை,செப்.23- பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 7-ஆம் தேதி சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொடூர கொலைச் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை 28 பேர்களைக் கைது செய்து விசாரித்து வரும் நிலையில், ஆற்காடு சுரேஷ், மார்க்கெட் ரவி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சீசிங் ராஜாவும் இதில் சம்மந்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.
சீசிங் ராஜா சென்னையில் பிரபலமான கூலிப்படை தலைவனாக செயல்பட்டவர். சென்னை மட்டுமின்றி ஆந்திராவிலும் கொலை வழக்குகள் உள்ளன. இதற்காக பல முறை சிறை சென்றுள்ளார். 7 முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர். 6 கொலை வழக்கு உட்பட 39 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சீசிங் ராஜாவை ஏற்கெனவே தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. பத்துக்கும் அதிகமான வழக்குகளில் சீசிங் ராஜா மீது பிடிவாரண்ட் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சீசிங் ராஜாவை ஆந்திர மாநிலம் கடப்பாவில் தனிப்படை போலீசார் ஞாயிறன்று கைது செய்தனர். பின்னர் அவரை அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அதிகாலை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள ‘அக்கரை’ பகுதியில் பக்கிங்காம் கால்வாய் அருகே ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த இடத்திற்கு அவரை அழைத்துச் சென்றபோது, சீசிங் ராஜா, கள்ளத் துப்பாக்கியால் காவல்துறை யினரை நோக்கிச் சுட்டதாக கூறப்படு கிறது. அப்போது, காவல் ஆய்வாளர் விமல் தற்காப்புக்காக சுட்டதில் சீசிங் ராஜா கொல்லப்பட்டுள்ளார். சீசிங் ராஜா வுடன் சேர்த்து, தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மூன்று ரவுடி கள் என்கவுண்ட்டர்கள் நடைபெற்றுள்ளன.