சென்னை, ஜூலை 11- இந்திய மருத்துவத்தை அரசு நம்ப வில்லை என்பது தவறான கருத்து. சித்த மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதன்மூலமும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இதனை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. தொற்று அளவு அதிக ரிக்காமல் தடுக்க சித்த மருத்துவம் பய னுள்ளதாக இருக்கிறது என்று குடும்ப நலத்துறை செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் தெரிவிததார். அம்பத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட அத்திப்பட்டில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அமைக்கப் பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 5 ஆயிரம் படுக்கை வசதியுடன் இந்த மையம் தயாராகி வருகிறது. முதற் கட்டமாக 1000 படுக்கை வசதியுடன் ஒரு பிளாக் தயார் நிலையில் உள்ளது. இந்த மையத்தில் கொரோனா நோயாளி களுக்காக முதன்முறையாக அட்டை பெட்டி கள் மூலம் படுக்கைகள் தயார் செய்யப் பட்டுள்ளது. தமிழகத்தில் தான் ரெம்டிசிவீர், டாசிலிசு மாப் உள்ளிட்ட சிறப்பு மருந்துகள் தட்டுப் பாடுகள் இன்றி கிடைக்கின்றன. கொரோனா நோயாளிகள் இறப்பு எண்ணிக்கையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக் கப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஆரம்பகட்ட சிகிச்சை அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.