tamilnadu

குறுவை பருவ பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும் அமைச்சர் வேண்டுகோள்

சென்னை, ஜூலை 3- தமிழ்நாட்டில் 2024-ஆம்  ஆண்டுக்கான குறுவை பருவ  பயிர்களை, ஜூலை 31ஆம் தேதிக் குள் காப்பீடு செய்ய வேண்டும் என்று, வேளாண்மைத் துறை  அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், விவசாயிகளைக் கேட்  டுக் கொண்டுள்ளார்.

வேளாண்மைக்கென 2024- 2025 ஆம் நிதியாண்டில் தாக்கல்  செய்யப்பட்ட தனி நிதிநிலை அறிக்கையில் ரூ. 1,775 கோடி நிதி  ஒதுக்கீட்டில் பிரதமரின் பயிர்க்  காப்பீட்டுத் திட்டம் நடப்பாண் டில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் அறிவித்திருந்தார்.

அதன்படி தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் 2024-2025 ஆம் ஆண்டில் குறுவை, சம்பா, நவரை- கோடை ஆகிய மூன்று பருவங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்த வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில், ஜூன் 28 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

2024 ஆம் ஆண்டு குறுவைப்  பருவத்தில் நெல், மக்காச் சோளம், துவரை, உளுந்து, பச் சைப்பயறு, நிலக்கடலை, ராகி, சோளம், கம்பு, தட்டை பயறு, எள், பருத்தி, சாமை மற்றும் கொள்ளு ஆகிய 14 வேளாண் பயிர்களுக்கு வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளைக் கிழங்கு, கேரட், கத்திரி, வெண்டை, மஞ்  சள், தக்காளி, பூண்டு, இஞ்சி மற்  றும் முட்டைகோஸ் ஆகிய 12  தோட்டக்கலைப் பயிர்களுக்கு  காப்பீடு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு குறுவை பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கான விவசாயிகள் பதிவு 2024 ஜூன் 21  முதல் ஒன்றிய அரசின் தேசிய பயிர்க் காப்பீட்டு வலைதளத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், முக்கியப் பயிரான குறுவை நெற்பயிரை 2024 ஜூலை 31 வரை விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம்.

இத்திட்டத்தின்கீழ் மகசூல் இழப்பு, விதைப்பு, நடவு செய்ய  இயலாத நிலை, நடவு பொய்த்தல்,  பகுதி சார்ந்த மற்றும் பயிர்  வளர்ச்சி கால இடர் நிகழ்வு களால் ஏற்படும் இழப்பு மற்றும் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு போன்ற இனங்கள் காப்பீடு செய்யப்படுகின்றன.

எனவே, விவசாயிகள் எதிர் பாராமல் ஏற்படும் இயற்கை பேரி டர்களும், பூச்சி நோய்த் தாக்கு தலால் ஏற்படும் மகசூல் இழப்பு  உள்ளிட்ட பல்வேறு காரணி களையும் கருத்தில் கொண்டு அருகிலுள்ள பொது சேவை மையங்களில், தொடக்க வேளா ண்மை கூட்டுறவு கடன் சங்கங்க ளில் அல்லது தேசிய மயமாக்கப்  பட்ட வங்கிகளில் உரிய காப்பீட் டுக் கட்டணம் செலுத்தி குறிப் பிட்ட காலக்கெடுவிற்குள் (ஜூலை 31) பயிர்களைக் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

மேலும், புயல், வெள்ளம் ஆகி யவற்றால் பயிர் சேதம் அடைந்த  பிறகு இப்பயிரை காப்பீடு செய்ய  இயலாது. காப்பீடு செய்வதற் கான கடைசி தேதி நீட்டிக்கப்பட மாட்டாது.

விவசாயிகள் இத்திட்டத்தின்  கீழ் பதிவு செய்யும் போது முன் மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்  வாக அலுவலர் வழங்கும் அடங் கல் - விதைப்பு அறிக்கை,  வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை  நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்  திய பின் அதற்கான ரசீதை யும் பெற்றுக் கொள்ள வேண்டும்.  இதுகுறித்த கூடுதல் விபரங்க ளுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை  அலுவலர், உதவி வேளாண்மை  அலுவலர் அல்லது வங்கிக்  கிளைகளை அணுகலாம் என்று  அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்  குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.