மதுராந்தகம்,நவ.18- செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்த கம் அடுத்துள்ளது கருங்குழி பேரூராட்சி யில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தமிழகத்திலேயே முதன் முறையாக இப்பேரூராட்சியில் சோதனை முயற்சியாகக் கழிவுநீர் கசடு சுகாதார மேலாண்மை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ. 5 கோடி செலவில் 2 ஏக்கர் பரப்பளவில், 20 கழிவு நீர் உலர்த்துதல் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு கருங்குழி பேரூராட்சி, மதுராந்தகம் நகராட்சி மற்றும் சுற்றுவட்டாரத்திற்குள் 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்படும் கழிவு நீரினை தொட்டியில் கொட்டப்படுகிறது.
இத்தொட்டிகளுக்கு அடியில் கழிவுநீர் வடிகட்டி அமைக்கப்பட்டு ள்ளது. இது கழிவுநீரில் உள்ள கழிவு கள் மற்றும் கசடுகள் தொட்டிகளில் தேங்க வைக்க உதவுகிறது. இங்கிருந்து பிரிக்கப்படும் கழிவு நீர் நாணல் மற்றும் கல்வாழை நடப்பட்டுள்ள தொட்டிகளுக்குச் செல்கின்றது. இங்கு இயற்கையான முறையில் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு, முதிர்ச்சி குளம் எனப்படும் குளத்தில் விடப்படுகிறது. அங்கு தண்ணீரில் உள்ள கிருமிகள் சூரிய வெளிச்சத்தால் அழிக்கப்பட்டு, பிறகு நிலையான வடிகட்டி தொட்டிக்குச் சென்று, அங்கிருந்து இயற்கையான முறையில் மறு சுழற்சி செய்யபட்பட்ட தண்ணீர் கிடைக்கிறது. இந்த தண்ணீரை அதே வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோட்டங்களுக்கு நீர் பாசனம் செய்யப்படுகிறது. இதனால், அப்பகுதி யில் செடிகள் நன்கு செழித்து வளர்கின்றன. மேலும் தொட்டியில் தேங்கும் கழிவுகளை விவசாயிகள் பயிர்களுக்கு உரமாகப் பயன்படுத்த முடியும் என அரசு சான்று வழங்கியுள்ளது. தற்போது இந்த உரத்தினை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ள தாகப் பேரூராட்சியின் செயல் அலுவலர் கேசவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செயல் அலுவலர் கேசவன் கூறியதாவது:-
வீடுகளில் உள்ள கழிவு நீர்த் தொட்டிகளை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சுத்தம் செய்திட வேண்டும், கழிவு நீர் கசிந்து நிலத்தடி நீருடன் கலந்தால் அது நம் நீராதாரத்தை முழுமையாகக் கெடுத்துவிடும். தனியார் ஊர்தி மூலம் அகற்றப்படும் கழிவு நீர் சாலையோரங்களிலும், நீர்நிலைகளிலும் கொட்டப்படுகின்றது. அவ்வாறு கொட்டப்படும் போது அப்பகுதியில் நிலத்தடி நீரும், சுகாதாரக்கேடும் ஏற்படும். இதனால் கழிவு நீர் ஊர்தி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதால் இதற்காக பொது மக்களிடம் கூடுதலான கட்டணம் மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. சில இடங்க ளில் விவசாய நிலங்களில் கூட கழிவு நீர் கசடுகளைக் கொட்டும் நிலை உள்ளது.
வீடுகளில் உள்ள கழிவுநீரை அகற்ற கருங்குழி பேரூராட்சியில் ரூ.1600 செலுத்தினால் அவர்களே லாரியை அனுப்பி கழிவுநீரை தங்களின் மேலாண்மை நிலையத்திற்கு எடுத்துச் சென்றுவிடுவார்கள். பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டத்திற்குத் தமிழக அரசு தனிச்சட்டம் இயற்றி அதற்கான வழிமுறைகளையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலேயே முதன்முறையாகச் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தினை நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து அதிகாரிகள் வந்து பார்த்து செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.