காஞ்சிபுரம், மே 31-பொது மக்களுக்கு சேவை செய்யும் இ சேவை மற்றும் ஆதார் சேவை மையங்களை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என வலியுறுத்தி இ-சேவை மைய ஊழியர்கள் வெள்ளிக்கிழமை அன்று (மே 31)காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர்.தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன. இந்த இ-சேவை மையங்கள் மூலமாக வருமானம்,பிறப்பு, இறப்பு, சாதி சான்றிதழ், ஆதார் அட்டை போன்ற எழுபதுக்கும் மேற் பட்ட சேவைகள் வழங்கப் பட்டு வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ் நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட இ-சேவை மையங் கள் நடத்தப்படுகின்றன.இந்த இ-சேவை மையங் கள் மூலமாக லட்சக்கணக் கான பொது மக்கள் பயன் பெற்று வருகின்றனர். இங்கே பணிபுரியும் ஊழியர்கள் மிக குறைந்த ஊதியத்தை பெற்றுக்கொண்டு பணிபுரிகிறார்கள். அந்த குறைந்த ஊதியத்தை கூட சரிவர வழங்காமலும், ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்த ஊதியத்தை திரும்ப வழங்காமலும் நிர்வாகம் இழுத்தடிக்கிறது. இந்நிலையில் இ-சேவை மையங்களை தனியாரிடம் ஒப்படைக்க தமிழக அரசு முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த இ-சேவை மையங் களை தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது என்றும்,பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் எனவும், குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் எனவும், பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும் போன்ற கோரிக் கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே யூனியன் ஆப் ஐடி & ஐடிஇஎஸ் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.இந்த உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்து சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் தாமோதரன் பேசினார். இந்த உண்ணாவிரத போராட்டத் தில் சிபிஎம் நகரச் செயலாளர் சி.சங்கர், ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் ஒய்.சீதாராமன், காஞ்சி மின் திட்டச் செயலாளர் டி. சிறீதர்,சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஆர்.மதுசூதனன், விவசாய சங்க மாவட்ட நிர்வாகி சாரங்கன் ,உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஜி.வசந்தா, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் ரவி உட்பட பலர் பேசினர். பட்டு கூட்டுறவு ஊழியர் சங்கத் தலைவர் ஏ.வாசுதேவன் உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்து வைத்து சிறப்புரையாற்றினார். இதில் நூற்றுக்கும் மேற் பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.