சென்னை, ஜூலை 19- சென்னை காவல் துறையில் வெள்ளிக் கிழமை வரை 1,501 பேர் கொரோனா தொற் றால் பாதிக்கப்பட்டிருந்தனர். சனிக் கிழமை புதிதாக 16 பேர் தொற்றால் பாதிக் கப்பட்டனர். இதையடுத்து தொற்று பாதிப்பு 1,517 ஆக உயர்ந்தது. சனிக்கிழமை 27 காவலர்கள் குணம் அடைந்து பணிக்கு திரும்பினர். இதுவரை 1,027 காவல் துறையினர் பணிக்கு திரும்பி யுள்ளனர். சென்னை காவல் துறையில் தொற்று பாதிப்பை விட குணம் அடைபவர்கள் எண் ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவை வென்று பணிக்கு திரும்பும் காவல் துறையினர், ‘கொரோனாவை பற்றி பயப்படாமல் தைரியமாக இருந்தாலே போதும், அந்த நோயின் பிடியில் இருந்து எளிதில் மீண்டு வந்து விடலாம். எனவே தைரியம் தான் கொரோனாவுக்கு முதல் தடுப்பு மருந்து’ என்று சக காவல் துறை யினருக்கு தன்னம்பிக்கை ஊட்டி வரு கிறார்கள்.