காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் திருவண்ணாமலையில் மாவட்டத்தலைவர் சம்பத் , கிருஷ்ணகிரியில் மாவட்டதலைவர் சந்திரன், கடலூரில் மாவட்டத்தலைவர் ஏ.நாகம்மாள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு வெள்ளியன்று கவனஈர்ப்பு தர்ணா நடைபெற்றது. இந்த போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர்.