tamilnadu

img

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு!

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான காலாண்டு தேர்வுகள், முதல் பருவ தேர்வுகள் கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி முடிவடைந்தது.

இதையடுத்து, மாணவர்களுக்கு செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் அக்டோபர் 6 வரை 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில், விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் இன்று திறக்கப்படுகின்றன.