tamilnadu

img

பள்ளி கல்லூரிகள் திறப்பு ஒத்தி வைப்பு - ஆன்லைன் வகுப்பு 4 நாள் விடுமுறை

 கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு பாடங்களை எடுத்துவருகின்றனர். இந்நிலையில் 9 முதல் 12ம் வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் 16ம் தேதி பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால் அரசின் அறிவிப்புக்கு பெற்றோர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து பள்ளிகள் திறப்பு குறித்து நவ.9ம் தேதி பெற்றோரின் கருத்துகளை கேட்கும் கூட்டம் நடந்தது. இந்நிலையில் தமிழக அரசு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுகிறது. வருகிற 16-ந்தேதி திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. 
தமிழகத்தில் வருகிற 16-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படாது. சூழ்நிலைக்கேற்ப பள்ளி திறப்பு தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 
இந்நிலையில் தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி ஆன்லைன் வகுப்புகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.