tamilnadu

img

சாவர்க்கரை வரலாறு மன்னிக்காது நூல் வெளியீடு

சென்னையில் நடைபெறும் 45வது புத்தகக்கண்காட்சியில் சாவர்க்கரை வரலாறு மன்னிக்காது என்கிற நூல் வெளியிடப்பட்டது.

சென்னை புத்தகக்கண்காட்சி பிப்ரவரி 6ஆம் தேதியன்று தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதில், எழுத்தாளர்களின் நூல் வெளியிட்டு விழாவும் நடைபெறுகிறது.

இந்நிலையில், பத்திரிகையாளரான ஆர்.விஜயசங்கர் எழுதிய சாவர்க்கரை வரலாறு மன்னிக்காது என்கிற நூல் வெளியிட்டு விழா பிப்.21 அன்று நடைபெற்றது.

இதில், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் நூலை வெளியிட, நக்கீரன் கோபால் பெற்றுக்கொண்டார். நிறைவாக நூலின் ஆசிரியர் ஆர்.விஜயசங்கர் ஏற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில், எழுத்தாளர்கள், வாசகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

;