tamilnadu

img

‘சாம்சங் இந்தியா’ நிறுவனத்தின் சட்டவிரோத செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்! தமிழக அரசுக்கு சிஐடியு வலியுறுத்தல்

சென்னை, செப். 12 - ‘சாம்சங்’ இந்தியா நிறுவனத்தின் சட்ட விரோத நடவடிக்கைகளே வேலைநிறுத்தத் திற்கு காரணம் என்றும், தமிழக அரசு தலை யிட்டு, தொழிலாளர்களின் சட்ட உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றும் சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சிஐடியு மாநிலத் தலை வர் அ. சவுந்தரராசன், பொதுச்செயலாளர் ஜி. சுகுமாறன் ஆகியோர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் அவர்கள் குறிப்பிட் டிருப்பதாவது:

தொழிற்சங்க உரிமைக்காகவே தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

சாம்சங் நிறுவனத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் தொழிற்சாலையில் 09.09.2024 அன்றிலிருந்து வேலை நிறுத்தம் நடை பெற்று வருகிறது. நான்காம் நாளான வியாழ னன்று (செப்.12) வேலை நிறுத்தத்தில் 85 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கட்டுப்பாட்டோடு நிற்கின்றனர்.

அவர்களின் முதன்மையான கோரிக்கை தொழிலாளர்கள் விரும்பும் தொழிற்சங்கத் தை அமைத்துக் கொள்ளும் உரிமையை ஏற்க வேண்டும் என்பதுதான். கூட்டுபேர உரிமை என்கிற சட்ட உரிமைப்படி தங்க ளோடு, தங்களின் கோரிக்கை குறித்து  விவாதித்து முடிவிற்கு வர நிர்வாகம் முன் வரவேண்டுமென்பது தொழிலாளர்களின் ஜனநாயக எதிர்ப்பார்ப்பு. இதை நிர்வாகம் மறுக்கிறது. இது இந்திய சட்டங்களுக்கு விரோதமானது. சட்ட உரிமையை ஒருவர் பயன்படுத்தக்கூடாது, என்று மறைமுகமாக தடுக்க முற்படுவதுதான் சட்ட விரோதம். நிர்வாகம் இந்த சட்ட விரோத முடிவுகளை கைவிட்டால், உடனே வேலைநிறுத்தம் முடிவிற்கு வரும்.

சட்டவிரோத வழிகளில் போகும் ‘சாம்சங்’ நிறுவனம்

சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைக ளை உடனே பேசி முடித்தால்தான் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்படும் என்று தொ ழிற்சங்கம் கூறவில்லை. இதுதொடர்ச்சியாக செய்ய வேண்டிய வேலை என்பதை தொழிற்சங்கம் அறியும்.

அமைக்கப்பட்டுள்ள ஒரு தொழிற் சங்கத்தை வலுவிழக்கச் செய்யவும் குற்றுயி ராக்கும் (undermine) வகையிலும் நிர்வா கமே போட்டிச் சங்கத்தை அமைப்பதும் ஊக்குவிப்பதும் குற்றம். தனது அதிகா ரத்தைப் பயன்படுத்தி தொழிலாளர்களை மிரட்டி அந்த அமைப்பில் சேர வைப்ப தும், அதற்கு சலுகை காட்டுதலைப் பயன் படுத்துவதும் தொழிலாளர் விரோத நடவ டிக்கையாகும். நிர்வாகம் இந்த நடவடிக்கை யில் இறங்கியதால் தான் வேலை நிறுத்தம்  செய்ய வேண்டிய கட்டாயம் தொழிலாளர்க ளுக்கு ஏற்பட்டது.

சுமூக உறவை உண்டாக்க  அரசு தலையிட வேண்டும்!

இப்போதும் நிர்வாகம் கேஷுவல் தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பது நேரடி உற்பத்தியில் பயன்படுத்துவது, வெண்டார் கம்பெனிகளில் இருந்து தொழி லாளர்களைக் கொண்டு வந்து உற்பத்தி யில் ஈடுபடுத்துவது போன்ற சட்ட விரோத வேலைகளில் ஈடுபடுகிறது.

எனவே, அரசு உடனே தலையிட்டு தொழி லாளர்களின் சட்ட உரிமைகளை நிலை நாட்ட வேண்டும் என்றும் அதன் மூலம் சுமூக உறவை உண்டாக்க வேண்டும் என்றும் சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.