தமிழகத்தில் சலூன் கடைகள் இன்றும் நாளையும் இயங்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், இன்றும் நாளையும் அனைத்துக் கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், சலூன் கடைகளும் இன்றும் நாளையும் இயங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.