பட்டாசு விற்பனைக்கு தில்லியில் தடை!
புதுதில்லி, அக். 14 - அக்டோபர் 31 தீபாவளி பண்டிகை துவங்கி, கிறிஸ் துமஸ், புத்தாண்டு என தொட ர்ந்து விழாக்கள் நடைபெற இருக்கின்றன. இதை யொட்டி தில்லியில் காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு, பட்டாசுகளை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ, பதுக்கி வைக்க வோ, வெடிக்கவோ முற்றி லும் தடை விதிக்கப்படுவ தாக தில்லி மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் அறிவித்துள் ளது.
2025 ஜனவரி 1-ஆம் தேதி வரை இது நடைமுறை யில் இருக்கும் என்றும் ஆன்லைன் மூலம் நடைபெ றும் பட்டாசு விற்பனைக்கும் இந்த தடை உத்தரவு பொருந் தும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஆளுநராக ஆர்.என். ரவி தொடர்வது ஏன்?
அமைச்சர் விளக்கம் புதுதில்லி, அக். 14 - தமிழக ஆளுநர் ஆர். என். ரவியின் பதவிக்காலம் கடந்த ஜூலை 31-ஆம் தேதியுடன் நிறைவடைந் தது. எனினும், தற்போது வரை அவர் ஆளுநராக தொடர்கிறார். இதுகுறித்து, தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதியிடம் புதுக்கோட்டையில் திங்கள் கிழமை நடைபெற்ற செய்தி யாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ். ரகுபதி, “பதவிக்காலம் முடிந்தாலும் ஒன்றிய அரசு ஆளுநரைத் திரும்ப அழைத்துக் கொள் ளும் வரை அவர் தொடர லாம் என்பதால் பதவியில் தொடர்கிறார்” என தெரி வித்துள்ளார்.
மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கனமழை மேட்டூர் அணைக்கு 17 ஆயிரத்து 596 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 89.92 அடியாகவும், நீர் இருப்பு 52 டிஎம்சியாகவும் உள்ளது. காவிரி டெல்டாவுக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 7,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திங்களன்று காலை நிலவரப்படி 19 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
பாம்பன் ரயில் தூக்கு பாலம்: மீண்டும் ஆய்வு
இராமேஸ்வரம், அக். 14 - பாம்பன் புதிய ரயில் பாலத்தில் உள்ள செங்குத்து தூக்குப் பாலத்தை இயக்கி மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பாம்பனில் கட்டப் பட்டுள்ள 27 மீட்டர் உயரம், 77 மீட்டர் அகலமும் கொண்ட புதிய ரயில் பாலத்தை விரைவில் திறப்ப தற்கு, ரயில்வே அமைச்சகம் சார்பாக ஏற்பாடுகள் நடை பெற்று வருகின்றன. இந்நிலையில், தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர், திங்களன்று தூக்கு பால த்தை ஏற்றி, இறக்குவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.